மதுரை: பாலியல் குற்றங்கள் அதிகரிக்கும் நிலையில், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனைக் குழுக்கள் முறையாகச் செயல்படுகின்றனவா என்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை பதில் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய வழக்கறிஞர் சங்க உறுப்பினர் சப்னா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு, ஆண்டுதோறும் மாணவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். 2021-22-ல் அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழு பின்னர் மறுகட்டமைப்புச் செய்யப்படவில்லை. இதனால், மாணவர்களை பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாப்பதற்கான உரிய திட்டம் வகுக்கப்படாமல் உள்ளது.