புதுடெல்லி: “பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தை உயர் வகுப்பைச் சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டும்” என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, அவர் தனது கருத்தை திரும்பப் பெற்றார்.
டெல்லியில் நடந்த பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டதில் பேசிய நடிகரும், மத்திய இணை அமைச்சருமான சுரேஷ் கோபி கூறுகையில், “பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தை உயர் வகுப்பினர் மேற்பார்வையிட்டால் மட்டுமே உண்மையான வளர்ச்சி சாத்தியமாகும். பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே பழங்குடியினர் நலத்துறைக்கு அமைச்சராக முடியும் என்பது நம் நாட்டின் சாபக்கேடு.