திண்டுக்கல்: பழநியில் இருந்து 'குன்றம் காக்க, குமரனைக் காக்க' என்ற கோரிக்கையை முன் வைத்து, காவடிகளுடன் பாதயாத்திரையாக புறப்பட்ட பாஜக.வினர் 100 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையிலுள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளை பலியிட இஸ்லாமிய அமைப்புகள் திட்டமிட்ட நிலையில், இந்து முன்னணி போன்ற அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, இன்று (பிப்.4) இந்து முன்னணி உள்ளிட்ட சில இந்து அமைப்பினர் அறப்போராட்டத்துக்கு அழைப்பை விடுத்தனர்.