சென்னை: அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க 10 நாட்களில் முயற்சி எடுக்க வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் காலக்கெடு நிர்ணயித்துள்ளார். இது குறித்து தலைவர்கள் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.
“அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்துவிட்டு, வெளியில் சென்றவர்கள், தற்போது எந்த நிபந்தனையும் இல்லாமல், இணையத் தயாராக உள்ளனர். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதற்கு, வெளியில் சென்றவர்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும். அதோடு, கட்சியில் அமைதியாக இருப்பவர்களை செயல்பட வைக்க வேண்டும். இதில், யார் யாரை இணைக்க வேண்டும் என்பதை பொதுச் செயலாளர் முடிவு செய்யலாம். இதில், கருத்து வேறுபாடு எனக்கு இல்லை.