பழம்பெரும் நடிகையும் தயாரிப்பாளருமான கிருஷ்ணவேணி, ஹைதராபாத்தில் காலமானார். அவருக்கு வயது 103.
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்கத் தொடங்கிய கிருஷ்ணவேணி, தெலுங்கு, தமிழில் சில படங்களில் நடித்துள்ளார். தமிழில், புதுமைப்பித்தன் கதை, வசனம் எழுதி 1948-ம் ஆண்டு வெளியான ‘காமவல்லி’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார். 1939-ம் ஆண்டு மிர்சாபுரம் ஜமீன், மேகா வெங்கட்ராமையா அப்பா ராவ் பகதூரை திருமணம் செய்துகொண்டார்.