முதன் முதலாக பாகிஸ்தானுக்கு எதிராக டி20 தொடரை வென்று வரலாறு படைத்தது வங்கதேச அணி. 20 ஓவர்களில் 133 ரன்களை மட்டுமே எடுத்த வங்கதேசம் பிறகு பாகிஸ்தானை 125 ரன்களுக்கு மட்டுப்படுத்தி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்று கைப்பற்றி வரலாறு படைத்தது.
ஷெரே பங்ளா ஸ்டேடியம் நேற்று நிரம்பி வழிந்தது. 15/5லிருந்து பாகிஸ்தான் அணி எதிர்த்துப் போராடியது, ஃபாஹிம் அஷ்ரப் ஃபைட் பேக் அரைசதம் விளாச, அறிமுக வீரர் டானியால் கடைசியில் ஆட்டமிழந்து பாகிஸ்தான் ரசிகர்களின் இதயத்தை நொறுக்கி விட்டார். வங்கதேச ரசிகர்கள் கொண்டாட்டம் போட்டனர்.