மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் பைசரன் பள்ளத்தாக்கில் குதிரை சவாரி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தவர் சையது அடில் உசேன் ஷா. சுற்றுலாப் பயணிகளை குதிரை மூலம் சுற்றுலா இடங்களுக்கு அழைத்து செல்வது இவரது வழக்கம்.
இந்த நிலையில், திடீரென நடத்தப்பட்ட தீவிரவாதிகளின் தாக்குதலை அறிந்த உசேன் ஷா, தான் அழைத்து வந்த சுற்றுலா பயணிகள் ஆபத்தில் சிக்கிக் கொண்டதை அறிந்து தீவிரவாதி ஒருவரின் கையில் இருந்த துப்பாக்கியை பறிக்க முயன்றார். ஆனால், அவர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.