ஸ்ரீநகர்: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், உயிரிழந்தவர்களின் உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். சுற்றுலா சென்றவர்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு முன்பாக அவர்களின் மதம் குறித்து கேட்டு பின்னர் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். குஜராத், கர்நாடகா உள்பட பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.