ஜெய்ப்பூர்: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தை சேர்ந்த மன்கத் சிங் என்பவரை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
இவருக்கு கடந்த 2023-ம் ஆண்டு பாகிஸ்தானை சேர்ந்த இஷா சர்மா என்ற பெண்ணுடன் ஆன்லைனில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பை சேர்ந்தவர் ஆவார். ‘ஹனி டிராப்’ எனப்படும் ஆளை மயக்கி அவரிடமிருந்து தகவல்களை பெறுவதுதான் இந்த உளவாளிகளின் வேலை.