டிரினிடாட்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.
டிரினிடாட்டில் நேற்று முன் தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டம் மழை காரணமாக 37 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 37 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹசன் நவாஸ் 36, ஹுசைன் தலத் 31, அப்துல்லா ஷபிக் 26, சைம் அயூப் 23. கேப்டன் முகமது ரிஸ்வான் 16 ரன்கள் சேர்த்தனர்.