லாகூர்: நடப்பு ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் தோல்வியை அடுத்து அந்நாட்டு மக்கள் அந்த அணி மற்றும் அதன் வீரர்கள் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் வீரர்கள். பத்திரிகையாளர்கள், மக்கள் என பலரும் தங்கள் அணியை விமர்சித்துள்ளனர். இதன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் உள்ளன.
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான அரசாங்க ரீதியிலான அணுகல், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணியில் இந்த முறை அனுபவ வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, பாபர் அஸம், முகமது ரிஸ்வான் உள்ளிட்டோர் இல்லாததும் இதற்கு காரணம். அதோடு இறுதிப் போட்டியில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 20 ரன்கள் எடுத்து இந்தியா தடுமாறியது. அந்த சூழலில் இருந்து மீண்டு வந்து இந்திய அணி வாகை சூடியது.