லண்டன்: “பாகிஸ்தானிடமிருந்து ஆக்கிரமிப்புகளை மீட்டுவிட்டால் காஷ்மீரின் மொத்தப்பிரச்சினையும் தீர்ந்துவிடும்” என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். பிரிட்டன், அயர்லாந்து நாடுகளுக்கு 6 நாட்கள் அரசுமுறைப் பயணமாகச் சென்றுள்ளார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்.
அமைச்சரை தாக்க முயற்சி: முன்னதாக லண்டனில் பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் லேமியின் செவனிங் ஹவுஸில் இருதரப்பு ஆலோசனையில் கலந்து கொண்டார். அப்போது வெளியே திரண்டிருந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஜெய்சங்கருக்கு எதிராக கோஷமிட்டனர். காலிஸ்தான் ஆதரவு பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். அதில் ஒருவர் அமைச்சர் ஜெய்சங்கர் சென்ற் காரின் முன்னால் பாய்ந்ததோடு அவரை தாக்கவும் முயற்சித்தார். அவரை காவலர்கள் லாவகமாகத் தடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர் கையில் வைத்திருந்த இந்திய தேசியக் கொடியை கிழித்தெறிந்தார்.