பாகிஸ்தான் மீது இந்திய ராணுவப் படைகள் தாக்குதல் நடத்தி வரும் வேளையில் இஸ்லாமாபாத்திலுள்ள பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் எம்.பி. ஷாகித் கட்டக் கலந்துகொண்டு பேசினார்.
அவர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் அவர் பேசியதாவது: நமது பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒரு கோழை. எந்த முடிவையும் எடுக்க தைரியம் இல்லாமல் இருக்கிறார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை உச்சரிக்கக் கூட அவருக்கு தைரியம் இல்லை.