ஆதம்பூர் (பஞ்சாப்): ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்துக்குச் சென்று வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இதுபோன்ற பதில் தாக்குதல் இனி இந்தியாவின் புதிய வழக்கமாக இருக்கும் என கூறினார்.
ஆதம்பூர் விமான தளத்தில் வீரர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, அவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர், "ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ஈடுபட்ட வீரர்கள் இந்தியாவின் எதிர்கால சந்ததியினருக்கு ஓர் உத்வேகமாக மாறிவிட்டனர். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது அனைத்து இந்தியர்களும் வீரர்களுடன் நின்று அவர்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்தனர்.