புதுடெல்லி: மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சமாஜ்வாதி எம்.பி அகிலேஷ் யாதவ் இடையிலான அரசியல் கிண்டலால் சிரிப்பலை எழுந்தது.
வக்பு திருத்த மசோதா மீதான விவாதத்தின்போது சமாஜ்வாதி கட்சித் தலைவரும் எம்.பி.யுமான அகிலேஷ் யாதவ் பேசும்போது, “இந்த மசோதா நம்பிக்கையை கொடுக்கும் என அமைச்சர் கூறுகிறார். ஆனால் அது எப்படி என்று ஆங்கிலத்தில் அல்லது இந்தியில் கூட என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை” என்றார். அப்போது அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.