புதுடெல்லி: மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வேதாந்தா நிறுவனம் சுரங்க தொழிலில் கோலோச்சி வருகிறது. அந்த நிறுவனம் சார்பில் கோவா, கர்நாடகா உட்பட பல மாநிலங்கள் மற்றும் லைபீரியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் சுரங்கங்கள் உள்ளன.
இந்த சூழலில் 2024-25-ம் நிதியாண்டில் பல்வேறு கட்சிகளுக்கு வழங்கிய நன்கொடை விவரங்களை வேதாந்தா நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இதன்படி அந்த நிறுவனம் சார்பில் பாஜகவுக்கு ரூ.97 கோடி நன்கொடை வழங்கப்பட்டு உள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு பாஜகவுக்கு ரூ.26 கோடி மட்டுமே நன்கொடையாக வழங்கப்பட்டது.