காஞ்சிபுரம் மாநகராட்சியில் 1978-ம் ஆண்டு பாதாள சாக்கடை அமைக்கப்பட்டது. ஆனால் காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதியில் பாதாள சாக்கடை இணைப்புகள் இல்லை. புதிதாக இணைக்கப்பட்ட பகுதியில் பாதாள சாக்கடை இணைப்புக்காக ரூ.254 கோடி உலக வங்கியின் நிதி உதவியுடன் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியை கொண்டு பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது வேதாசலம் நகர், ராகவேந்திர நகர் ஆகிய பகுதிகளில் தீவிரமாக பணிகள் நடைபெற்று வருகின்றன.