ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற மோதலில் 16 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் காயம் அடைந்தனர்.
சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் தண்டேவாடா மாவட்ட எல்லையில் அமைந்துள்ள உபம்பள்ளி கெர்லபால் வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலையில் பாதுகாப்பு படையினர் – மாவோயிஸ்ட்கள் இடையே இடைவிடாத மோதல் ஏற்பட்டது.