மத்திய தொழில்பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) பிரிவின் தென் பிராந்தியத்தில் 60 சதவீதம் பணியாளர்கள் உள்ளூர் மொழி தெரிந்தவர்களாக தேர்வு செய்யப்படுகின்றனர் என்று அந்த படைப் பிரிவின் ஐஜி சரவணன் அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது.
தென் மாநிலங்களில் படைப்பிரிவுக்கான ஆள்தேர்வு தமிழகம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா மாநிலங்களைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளூர் மொழி தெரிந்தவர்களாகவும் தேர்வு செய்யப்படுகின்றனர். விமான நிலையங்களில் ஏற்படும் மொழிப் பிரச்சினையை சமாளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் அறிவித்திருப்பது தென் மாநில மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது.