கிருஷ்ணகிரி: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணிக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், பாமகவில் ஒற்றுமை திரும்ப வேண்டியும், சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற வேண்டியும், கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட பாமக சார்பில, காட்டுவீர ஆஞ்ச்நேயர் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடந்தன.
மாவட்டச் செயலாளர் மோகன்ராம் தலைமையில், கட்சியினர் கோயிலை 11 முறை வலம் வந்து, வேண்டுதல் தேங்காய் உடைத்தனர். பின்னர், மாவட்ட செயலாளர் மோகன்ராம், ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் அங்கப்பிரதட்சணம் செய்தனர்.