திருச்சி: தஞ்சாவூர் பெரிய கோயிலில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக மத்திய ரயில்வே மற்றும் ஜல்சக்தித் துறை இணை அமைச்சர் சோமண்ணா, பெங்களூருவிலிருந்து விமானம் மூலம் இன்று திருச்சிக்கு வந்தார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ''ராமேஸ்வரத்தில் பாம்பன் ரயில் பாலம் பணிகள் முழுமையாக நிறைவடைந்து விட்டது. பிரதமர் மோடி தேதி கிடைத்ததும் திறப்புவிழா விரைவில் நடக்கும். பிரயாக்ராஜ் கும்பமேளாவிற்கு ரயிலில் சென்ற பக்தர்கள் எந்த சிரமத்தையும் அனுபவிக்கவில்லை. நான் அங்கு 5 நாட்கள் தங்கியிருந்தேன். ரயில்வே உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் சிறப்பாக செயல்பட்டன. மக்கள் அனைவரும் நிம்மதியாக கும்பமேளாவிற்கு சென்று வந்தனர். பிரயாக்ராஜ் செல்வதற்காக மும்பையிலிருந்து நான்கு நிமிடத்திற்கு ஒரு ரயில் விடப்பட்டது.