
பாலாறு பெரு வெள்ளத்தில் உயிரிழந்த 200-க்கும் மேற்பட்டோர் மற்றும் பாலாறு உரிமைக்காக போராடியவர்களுக்கு 122ம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வாணியம்பாடியில் இன்று நடைபெற்றது.
கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகி கோலார் மாவட்டம் வழியாக 90 கி.மீ பயணிக்கும் பாலாறு, ஆந்திர மாநிலத்தில் 30 கி.மீ பயணித்து தமிழகத்தில் புல்லூர் என்ற இடத்தில் நுழைந்து அகண்ட பாலாறாக தமிழ்நாட்டில் 222 கி.மீ தொலைவுக்கு ஓடி செங்கல்பட்டு மாவட்டமவயலூர் அருகே வங்கக்கடலில் கலக்கிறது.

