அலகாபாத்: உத்தர பிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம், கடந்த மாதம் ஜாமீன் வழங்கி உள்ளது. மேலும், இந்த சம்பவத்துக்கு பாதிக்கப்பட்ட பெண் தான் காரணம் எனவும் நீதிமன்றம் பழி போட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் பாதிக்கப்பட்ட பெண், தனது நண்பர்களுடன் சேர்ந்து மதுபான கூடத்துக்கு சென்றுள்ளார். அங்கு மது அருந்தியதில் அவருக்கு போதை ஏறியுள்ளது. அங்கிருந்து அவர் புறப்பட வேறொருவரின் துணை தேவைப்பட்டுள்ளது. அப்போது குற்றச்சாட்டுக்கு ஆளான நபர் தனது வீட்டுக்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை அந்தப் பெண் தனது புகாரில் கூறியுள்ளார். போலீஸாரும் இதை முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்துள்ளனர்.