நெல்லை: பாளையங்கோட்டையில் ரூ.100 கோடி மதிப்பில் காயிதே மில்லத் பெயரில் நவீன நூலகம் அமையவுள்ள இடத்தை, தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநர் மற்றும் பொது நூலக இயக்குநர் பொ.சங்கர் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் நெல்லையில் நவீன நூலகம் கட்டப்படும் என்றும், அதற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும், இந்த நூலகத்துக்கு காயிதே மில்லத் பெயர் சூட்டப்படும் என்று கடந்த மாதம் 9-ம் தேதி திருச்சியில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் அறிவித்தார். நூலகம் அமைக்க பாளையங்கோட்டையில் மாவட்ட தொழில் மையம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டது.