புதுடெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் பாஸ்டேக் மூலமான சுங்க கட்டண வசூல் நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் (ஏப்ரல் – ஜூன்) 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து நேஷனல் எலக்ட்ரானிக் டோல் கலெக்சன் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரம்: தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் பாஸ்டேக் மூலம் வசூலிக்கப்படும் சுங்க கட்டணம் நடப்பு 2025-26-ம் நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் ரூ.21,000 கோடியாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய 2024-25-ம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வசூலான ரூ.17,280 கோடியுடன் ஒப்பிடும்போது 20 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.