சென்னை: சரியாக ஓராண்டுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் வீரர்களுக்கான ஆண்டு ஒப்பந்தத்தை இழந்தார் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர். இப்போது சாம்பியன்ஸ் டிராபி பட்டம் வென்றுள்ள இந்திய அணியில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு.
கிரிக்கெட் உலகின் தலைசிறந்த ‘நம்பர் 4’ நடுவரிசை நாயக பேட்ஸ்மேன்களில் ஒருவர் என்பதை அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடர் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளார். நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி தரப்பில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார்.