புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2024-ம் நிதியாண்டில் ரூ.9,741.7 கோாடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.
இதில், ஐபிஎல் மூலமான வருவாய் முக்கிய ஆதாரமாக உள்ளது புள்ளிவிவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.அதன்படி ஐபிஎல் மூலமாக பிசிசிஐ-க்கு கிடைத்த வருவாய் பங்குமட்டும் ரூ.5,761 கோடியாக உள்ளது. மேலும், மகளிர் பிரீமியர் லீக் மற்றும் உலகளாவிய உரிமைகள், ஒப்பந்தங்கள் உள்ளிட்டவை மூலமாக ரூ.100 கோடிக்கும் அதிகமான வருவாய் ஆதாரத்தை பிசிசிஐ உருவாக்கியுள்ளது. ஐபிஎல் அல்லாத ஊடக உரிமைகள் மூலமாக மட்டும் பிசிசிஐ ரூ.361 கோடி வருமானத்தை ஈட்டியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.