வாஷிங்கடன்: மீதமுள்ள அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிக்காவிட்டால், அழிவைச் சந்திக்க நேரிடும் என்று ஹமாஸ் குழுவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்ரூத் சமூக வலை பக்கத்தில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், “ஷாலோம் ஹமாஸ் என்றால் ‘ஹலோ’ அல்லது ‘குட்பை’ என்று அர்த்தம். விருப்பத்தை நீங்களே தேர்வு செய்யலாம். இப்போதே உங்களிடம் மீதமுள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும். அதேபோல் உங்களால் கொல்லப்பட்ட அனைவரின் உடல்களையும் உடனடியாக ஒப்படைக்கவேண்டும். மனநிலை பிறழ்ந்த நோயாளிகள் தான் உடல்களை தங்களுடன் வைத்திருப்பர். நீங்களும் மனநிலை பிறழ்ந்த நோயாளிகள்தான். அனைத்தையும் முடிக்க தேவையான எல்லா உதவிகளையும் நான் இஸ்ரேலுக்கு அனுப்புகிறேன். நான் கூறியபடி நீங்கள் செய்யாவிட்டால், ஹமாஸ் குழுவில் ஒருவர்கூட பாதுகாப்பாக இருக்கமுடியாது