ராமநாதபுரம்: வரும் ஏப்.6-ம் தேதி, பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைக்க உள்ளதை முன்னிட்டு தென்னக ரயில்வே அதிகாரிகள் ரயில் மற்றும் கப்பலை இயக்கி சோதனை நடத்தினர்.
மண்டபம் நிலப் பரப்பையும் ராமேசுவரம் தீவையும் இணைப்பதில் பாம்பன் ரயில் பாலம் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு பாம்பன் பழைய ரயில் பாலத்தில் உள்ள தூக்குப் பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மண்டபத்திலிருந்தே ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.