புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலராக ஐஎஃப்எஸ் அதிகாரி நிதி திவாரி நியமிக்கப்பட்டுள்ளதாக பணியாளர் அமைச்சக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014-ஆம் ஆண்டு இந்திய வெளியுறவு சேவை (ஐஎஃப்எஸ்) அதிகாரியான நிதி திவாரி, தற்போது பிரதமர் அலுவலகத்தில் துணைச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் (மார்ச் 29) வெளியிடப்பட்ட உத்தரவில், பிரதமரின் தனிச் செயலராக நிதி திவாரி நியமிக்கப்படுவதற்கு அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி திவாரியின் நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது.