புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளராக நிதி திவாரி நியமிக்கப்பட்டு உள்ளார்.
உத்தர பிரதேசத்தின் வாராணசியை சேர்ந்தவர் நிதி திவாரி. முதலில் வாராணசி வணிக வரித் துறை துணை ஆணையராக அவர் பணியாற்றி வந்தார். அந்த பணியில் இருந்து கொண்டே குடிமைத் பணித் தேர்வுக்கு அவர் தயாராகி வந்தார். கடந்த 2013-ம் ஆண்டில் குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்றார்.