புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் ராஜதந்திர முயற்சிகளின் பலனாக கடந்த 2014 முதல் வெளிநாட்டு சிறைகளில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் விடுதலை பெற்றுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
இதுகுறித்து மத்திய அரசின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த 2014 முதல் பிரதமர் மோடி தலைமையிலான அரசு வெளிநாடுகளில் உள்ள இந்திய குடிமக்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. தூதரக பேச்சுவார்த்தை மற்றும் உயர்நிலை தலையீடுகள் மூலம் வெளிநாட்டு சிறைகளில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் விடுதலை பெற்று பத்திரமாக நாடு திரும்புவதை உறுதி செய்துள்ளது.