புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் அணுஆயுத மோதலை தான் தான் தடுத்ததாக 11-வது முறை டொனால்ட் ட்ரம்ப் கூறிவிட்டார். இவ்விஷயத்தில் பிரதமர் மோடி எப்போது மவுனத்தை கலைப்பார் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில், “பாகிஸ்தானுடனான போர் நிறுத்தம் எவ்வாறு நடந்தது என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரும் அமெரிக்க அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் 21 நாட்களில் 11வது முறையாகக் கூறியுள்ளார்.