கொழும்பு: பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 5-ம் தேதி இலங்கையில் பயணம் மேற்கொள்ள இருப்பதாக அந்நாட்டு அதிபர் அநுரா குமார திசாநாயக்க கூறினார்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் 'பிம்ஸ்டெக்' அமைப்பின் 6-வது உச்சி மாநாடு ஏப்ரல் 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.