புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 23 முதல் ஜூலை 26 வரை இங்கிலாந்து மற்றும் மாலத்தீவுகள் ஆகிய இரு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்த சுற்றுப்பயணத்தின்போது, பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்துவார். பிராந்திய மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள்.