பிரயாக்ராஜ்: உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் பிரயாக்ராஜில் உள்ள மகாகும்ப் நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கும்பமேளா நடந்து வரும் இடத்தில் உள்ள சங்கராச்சாகியா செக்டார் 18-ல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பல தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விபத்தில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.