உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை 34 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேறியுள்ளது.
உ.பி.யின் பிரயாக்ராஜில் 1976-ல் தேசிய அளவில் தொடங்கப்பட்டது பாஷா சங்கம். இந்தி, பெங்காலி, மராட்டி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழிகளைப் பேசுவோர் இதன் உறுப்பினர்கள் ஆவர். இந்த சங்கத்தின் சார்பில் அதன் நிறுவனரும், மறைந்த பொதுச் செயலாளருமான கிருஷ்ணசந்த் கவுடுவினால் 1990-ல் தொடங்கி பிரயாக்ராஜில் திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும் என கோரப்பட்டு வந்தது.