பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உரையாற்றினார். அப்போது அவருக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
பிரிட்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த 22-ம் தேதி இரவு கொல்கத்தாவில் இருந்து லண்டன் புறப்பட்டார். கடந்த 23-ம் தேதி முதல் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். லண்டனில் நடைபெற்ற தொழிலதிபர்களின் கூட்டத்தில் முதல்வர் மம்தா பங்கேற்றார். அப்போது மேற்குவங்கத்தில் தொழில் தொடங்க, முதலீடு செய்ய தொழிலதிபர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.