பாரிஸ்: கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலெங்கா, 2ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காஃபுடன் மோதினார்.
இதில் முதல் செட் கடும் போராட்டமாக இருந்தது. டைபிரேக்கர் வரை சென்ற இந்த செட்டை அரினா சபலெங்கா 7-6 (7-5) என கைப்பற்றினார். 2-வது செட்டில் பதிலடி கொடுத்த கோகோ காஃப் 6-2 என்ற கணக்கில் தன்வசப்படுத்தினார்.