பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் உக்ரைன் வீராங்கனை எலீனா ஸ்விட்டோலினா வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டத்தில் எலீனா ஸ்விட்டோலினாவும், இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினியும் மோதினர். இதில் எலீனா 4-6, 7-6 (6), 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.