பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார்.
பாரிஸ் நகரில் நடைபெற்று வந்த இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் இரவு முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 2-ம் நிலை வீரரும் நடப்பு சாம்பியனுமான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸுடன் மோதினார். இதில் முதல் இரு செட்களையும் ஜன்னிக் சின்னர் 6-4, 7-6(7-4) என்ற செட் கணக்கில் சின்னர் கைப்பற்றினார்.