ராமேசுவரம்: தனுஷ்கோடி கடற்பகுதியை பிளமிங்கோ பறவைகளின் சரணாலயமாக அறிவித்திட தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பறவைகள் குறித்த விரிவான குறிப்புகளும் ஆராய்ச்சிகளும் குறைவே. அவற்றின் பெரும்பாலானவை கடற்கரையோரப் பறவைகள் குறித்த ஆய்வுகள்தான் அதிகம்.
ஒருங்கிணைந்த ராமநாதபுரம் (விருதுநகர், சிவகங்கை) மாவட்டத்தில் பறவைகள் குறித்த விரிவான கட்டுரை சி.ஹெச். பித்துல்ப் (Biddulph) எனும் ஆங்கிலேயரால் 1938-ல் பாம்பே இயற்கை வரலாறு கழகத்தின் ஆய்விதழில் முதன்முறையாக வெளியானது. இதில் இவர் ராமேசுவரம் தீவில் 109 வகையான பறவைகளைப் பட்டியலிட்டுள்ளார்.