பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்றுடன் முடிவடைகிறது. இறுதி நாளில் இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறுகின்றன.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 3-ம் தேதி தொடங்கியது. இத்தேர்வை பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள், சிறைவாசிகள் என சுமார் 8 லட்சத்து 21 ஆயிரம் பேர் எழுதி வருகின்றனர். இந்நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது. இறுதி நாளில் இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறுகின்றன.