சென்னை: தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், பிளாஸ்டிக் குப்பைகளிலிருந்து மறுசுழற்சி செய்து தயாரிக்கப்பட்ட 100 பூங்கா இருக்கைகள், மாநகராட்சி மேயர் ஆர்.பிரியாவிடம் வழங்கப்பட்டது.
சென்னை மாநகரப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளில், சுமார் 30 சதவீதம் பிளாஸ்டிக் குப்பைகளாக உள்ளன. இவற்றை சேகரித்து மாநகராட்சி நிர்வாகம் மறுசுழற்சிக்கு அனுப்புகிறது.