
சமஸ்திபூர்: நிதிஷ் குமார் தலைமையின் கீழ் முந்தைய தேர்தல் சாதனைகள் அனைத்தையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி இம்முறை முறியடிக்கும் என்று பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. பிஹாரின் சமஸ்திபூரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். பெருமளவில் குழுமியிருந்த தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, "கடந்த 11 ஆண்டுகளில் பிஹாருக்கு மத்திய அரசு வழங்கிய நிதி, முந்தைய (மன்மோகன் சிங்) அரசு வழங்கியதைவிட மூன்று மடங்கு அதிகம். மாநிலம் தற்போது தலைகீழாக மாறிவிட்டது.

