புதுடெல்லி: பிஹார் மாநிலத்தின் பல மாவட்டங்களில் ஏற்பட்ட இடி, பலத்த மின்னல், சூறைக்காற்றால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இயற்கை சீற்றங்களில் சிக்கி, கடந்த 48 மணி நேரத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.
பிஹாரின் பல மாவட்டங்களில் புதன்கிழமை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், பொதுமக்கள் கடுமையாக சிரமத்துள்ளாகினர். தற்போதும், மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கனமழை, இடி, மின்னல் என வானில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால், சில இடங்களில் உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளது. இதுவரை 19 பேர் பரிதாபமாக உயிரிழந்து தெரியவந்துள்ளது. பிஹாரின் பெகுசராய் மாவட்டத்தில் 5 பேர், தர்பங்காவில் 5 பேர், மதுபானியில் 3 பேர் மற்றும் சஹர்சா மற்றும் சமஸ்திபூரில் தலா 2 பேர் மற்றும் லக்கிசராய் மற்றும் கயா மாவட்டங்களில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.