புதுடெல்லி: மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஆந்திர மாநிலத்தின் பங்கைப் பெறத் தவறியதற்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஆந்திரா மற்றும் பிஹார் மாநிலங்களுக்கு அதிகளவிலான நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த ஆண்டு பிஹாரில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. அதற்கேற்ப அங்கு புதிய விமான நிலையம், பாட்னா ஐஐடி விரிவாக்கம், தொழிற்சாலைகள், வேளாண் திட்டங்கள் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.