பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் குறைந்தது 18 இடங்களில் போட்டியிடுவோம் என்றும், இன்னும் சில தொகுதிகளுக்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் சிபிஐ-எம்எல் பொதுச் செயலாளர் தீபாங்கர் பட்டாச்சார்யா கூறினார்.
பிஹார் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட தேர்தல் நவம்பர் 6-ம் தேதி அன்றும், இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 11-ம் தேதியும் நடைபெறுகிறது. இதன் முடிவுகள் நவம்பர் 14 -ம் தேதி வெளியாக உள்ளன. பிஹாரில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜேடியு மற்றும் பாஜக கட்சிகள் தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 29 இடங்களிலும், ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா மற்றும் இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா ஆகியவை தலா 6 இடங்களிலும் போட்டியிடுகின்றன.