
பாட்னா: பிஹார் சட்டப்பேரவைக்கான முதற்கட்டத் தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 53.77% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு 18 மாவட்டங்களில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும். மதியம் 1 மணி நிலவரப்படி 42.31 சதவீத வாக்குகள் பதிவாகிய நிலையில், பிற்பகல் 3 மணி வரை 53.77% வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக பெகுசராய் மாவட்டத்தில் 59.82% வாக்குகள் பதிவாகி உள்ளன. தலைநகர் பாட்னாவில் 48.69% வாக்குகள் பதிவாகி உள்ளன.

