
பாட்னா: பிஹார் சட்டப்பேரவைக்கான முதற்கட்டத் தேர்தலில் மாலை 5 மணி வரை 60.13% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு 18 மாவட்டங்களில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி வரை 60.13% வாக்குகள் பதிவாகி உள்ளன. தேர்தல் நடைபெற்ற 18 மாவட்டங்களில் அதிகபட்சமாக பெகுசராய் மாவட்டத்தில் 67.32% வாக்குகள் பதிவாகி உள்ளன. தலைநகர் பாட்னாவில் 55.02% வாக்குகள் பதிவாகி உள்ளன.

